Share |


Toy Safety Tips Video
Follow us on Twitter

Latest News Reports
  • மறக்க முடியா மனிதர் (...தொடர்ச்சி)
    இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதிரை மக்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே அவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர், அப்போது மேடையில் வீற்றிருந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு S.D. சோம சுந்தரம் அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அதிரைக்குப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்! அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன!

    அத் தருணத்தில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் கூட்டுக் கல்வி (CO-EDUCATION) முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தாளாளர் அவர்களை அணுகி, ”பலரும் கூடுகின்ற இடமான மெயின் ரோட்டில் அமையவிருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்கு எங்கள் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஊரின் மையப்பகுதி ஒன்றில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட அறக் கட்டளையின் செயலாளர் ஹாஜி S.M.S. அவர்கள் துரிதமாகச் செயல்பட்டார், விடிந்தால் வெள்ளிக்கிழமை. இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்த எனக்கு கல்லூரி அலுவலக ஊழியர் ஜனாப் S.M.சுல்தான் அவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.


    அறக் கட்டளை அலுவலகம் இயங்கி வந்த சேர்மன் வாடிக்கு நான் விரைந்து சென்றேன். அபோது அங்கே தாளாளர் அவர்களுடன் ஜனாப் A.S.M.ரஹ்மத்துல்லா ஹாஜியார், ஹாஜி ஜனாப் மன்னார் M.K. அப்துல் காதர், ஹாஜி ஜனாப் M.A.M. பாட்சா மரைக்காயர் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு சென்ற என்னிடம் தாளாளர் அவர்கள் சொன்ன செய்தி இதுதான்: “நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், நம் அறக்கட்டளை சார்பில் சலாஹிய்யா மதரசா நடைபெற்று வரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் பெண்கள் உயர் பள்ளி துவக்கவும், அப்பள்ளியின் தலைமையாசிரியராக உன்னை நியமனம் செய்யவும் தீர்மானித்துள்ளோம். நாளை ஜும்ஆவுக்குப் பின் அட்மிஷன் செய்ய ஏதுவாக 5- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, படிப்பைத் தொடர முடியாமல் உள்ளவர்களில் குறைந்தது 10 மாணவிகளின் ரிகார்டு ஷீட்டுகளையும பெற்று, அப்பொழுதே அட்மிஷன் செய்யவேண்டும்; மறுநாள் நம் மேல் நிலைப் பள்ளியிலிருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளை அங்கிருந்து பிரித்து பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றவேண்டும். பெண்கள் பள்ளிக்குப் புதிய ஆசிரியைகளை நியமனம் செய்யும் வரை, ஆண்கள் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளைத் தற்காலிகமாகப் பெண்கள் பள்ளியில் பணியாற்றச் செய்யவேண்டும்!” போன்ற உத்தரவுகளைத் தாளாளர் அவர்கள் பிறப்பித்தார்கள்.

    தாளாளரின் உத்தரவுக்கு இணங்க அனைத்தும் துரிதமாக நடந்தேறின! 04-06–1986 –ஆம் நாள் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி நிறுவப்பட்டது! நான் தலைமையாசிரியராகவும், ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைகளான திருமதி H.நூர்ஜஹான், திருமதி R.வடிவழகி, திருமதி M.மேகலா ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றத் துவங்கினோம். சில மாதங்களில் பெண்கள் பள்ளிக்கெனத் தலைமையாசிரியை மற்றும் தேவையான ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டார்கள். நாங்கள் எங்கள் பள்ளிக்குத் திரும்பினோம். அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்குப் போட்டியாக நிறுவப்பட்ட பள்ளி எனக் கருதிய தமிழ் நாடு அரசு, காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளிககு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியைப் பணியிடங்களை வழங்கவும் தயக்கம் காட்டியது. தாளாளர் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடந்தார்கள். காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது. கல்வித் தந்தை ஹாஜி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனையோடு, ஏறத்தாழ 120 மாணவிகளோடு துவக்கப்பட்ட காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக, இன்று உயர்த்தப்பட்டு, 1200- க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.


    அரபி மதரசா, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, என வரிசையாகத் துவக்கப்பட்டு அவற்றை நிர்வகித்து வந்த போதிலும், தாளாளரின் கல்வித் தாகம் மட்டும் தணியவில்லை. சிறு குழந்தைகளின் தொடக்கக் கல்வியின் அவசியத்தை அறிந்து ‘சாதுலியா மழலையர் பள்ளி’யையும், தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து, சாதுலியா தொழிற் கல்வி நிலையத்தையும் தொடங்கி, அதிரையின் எல்லாப் பருவத்தினருக்கும் அனைத்து வகைக் கல்வியும் கிடைத்திட வழி செய்தார், நமது கல்வித் தந்தை அவர்கள்!

    எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய முன்னேற்றத்திற்குத் தாளாளர் அவர்களின் பங்களிப்பைப் பற்றி இங்கு குறிப்பிட மறந்தேனென்றால், நன்றி கொன்றவனாகிவிடுவேன். கல்விக் கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்ற காலக் கட்டத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அறக் கட்டளையின் கட்டணச் சலுகையில் படித்து முடித்ததையும், B,sc. பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணி செய்திட வாய்ப்புத் தந்ததையும், உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டபோது, கணித முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிட வாய்ப்பு வழங்கியதையும், முதுகலைப் பட்டங்களோடு என்னினும் மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க, அத் தருணத்தில் முது கலைப் பட்டம் பெற்றிராத என்னை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்ததையும் உயிர் உள்ள வரை என்னால் மறக்க முடியாது.


    02–10–1986 வியாழக்கிழமை, அதிரை நகர வரலாற்றிலும், கல்வி நிறுவனங்களின்வ வரலாற்றிலும் ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பை ஏற்படுத்திய கண்ணீரில் மூழ்கடித்த நாளாகும். ஆம்! அந்த நாள் தான் மறக்க முடியா மனிதர் மறைந்த நாள்! இறை நாட்டப்படி நேர்ந்த இறப்பால் ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது மிகக் கடினம் என்ற போதிலும் அன்னாரது மூத்த புதல்வர் ஹாஜி ஜனாப் S.முகம்மது முகைதீன் அவர்களும் அவரைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர் ஹாஜி ஜனாப் A.M. சம்சுதீன் அவர்களும் அந்த வெற்றிடத்தை நிறைவு செய்தார்கள். தற்போது ஹாஜி S.M.S. அவர்களின் இரண்டாவது புதல்வர் ஜனாப் Dr. S.முகம்மது அஸ்லம் அவர்கள் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளராக மிகச் சிறப்பாகச் செயல் பட்டு வருவது பாராட்டுக்குரியது. உலகம் உள்ள வரை கல்வி இருக்கும். கல்வி உள்ள வரை கல்வித் தந்தை ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் புகழ் இருக்கும் என்பது உறுதி.


    ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,
    தலைமை ஆசிரியர் (ஓய்வு)
    காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
    அதிராம்பட்டினம்
  • மூன்று வியப்புகள்!!! - பகுதி - 2

    பகுதி - 2

    பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்!  

    காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது! “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி?”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்! எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத் துறு துறு என்று இருந்தார், கல்லூரி நிர்வாகி!

    மாலையில் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன். ‘ஊர்தான் மோசம்; கலூரிக் கட்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும்’  என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்தது! “இதுவா கல்லூரி?” என்று மூன்றாவது வியப்பு ஏற்பட்டது! அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது! கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை நினைவூட்டின!

    முப்பது ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியையும் கண்ணால் கண்டவர்கள்தான்,  கல்வித் தந்தை S.M.S.  ஷேக் ஜலாலுதீன் அரும் பாடுபட்டு செங்கல் செங்கலாகக் கல்லூரியை வளர்த்ததையும், கல்லூரியால் ஊர் முன்னேறியதையும் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.


    அரச மரத்தைப் பிடித்த சனி, பிள்ளையாரையும் பிடித்ததாம்! அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது! அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள்  பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள்! வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள்! அப்படிச் சேர்ந்த  மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்தது!

    நான் பணியாற்றத் தொடங்கிய 1957 –ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 80 – க்கும் குறைவே! ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே! மாணவர் குறைவுக்கு, வசதியற்ற சூழல் காரணம் என்பார் முதல்வர் தனக்கோடி!

    வேலை தேடி வந்த ஆசிரியப் பெருமக்கள் சிலர், ஊரைப் பார்த்ததும், “வேலையே வேண்டாம்” என்று சொல்லி ஓட்டம் பிடித்ததும் உண்டு! வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள்! கல்லூரி எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்ற அச்சம் வேறு அவர்களுக்கு!

    எவ்வளவோ பணத் தட்டுப்பாடும் சிரமங்களும் பேரலைகளாக மோதிய போதிலும், எதிர் நீச்சல் போட்டுச் சமாளித்தாரே தவிர எக் காரணத்தைக் கொண்டும் கல்லூரியை மூடும் எண்ணம் தாளாளருக்குத் தோன்றியதே இல்லை! பட்டப் படிப்பு எதையாவது மூடலாம் என்று முதல்வர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தாளாளர் அப்படி நினைத்ததில்லை!

    அதே சமயத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தத் தாளாளர் பெரும் முயற்சி செய்தார்! அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள்! பக்கத்து ஊர்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கண்டு பேசத் தகுந்தோரை அனுப்பினார். தலைமை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு, காதிர் முகைதீன் கல்லூரியைப் பரிந்துரை செய்தார்கள். பல்கலைக் கழகத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற  வெற்றி விழுக்காடுகள் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டன 1962 - ல் மாணவர்கள் எண்ணிக்கை 320 ஆயிற்று!


    கல்லூரியின் தொடக்க ஆண்டுகளில் நிதிப் பற்றாக் குறையால் ஆசிரியப் பெரு மக்களும் மாணவ மணிகளும் பல சிரமங்களுக்கு ஆளாயினர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர்களுக்கு மாதா மாதம் முதல் தேதி அன்றே ஊதியம் கிடைத்ததில்லை! ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பணமோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார்! ஆசிரியர்களின் அவசரத் தேவைக்கு பகுதிச் சம்பளம் கொடுத்ததும் உண்டு. நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத் தூக்கி, ஆட்டிலும் போடுவது போல, வருவாயைக் கல்லூரி விடுதிக்கும் செலவிடுவார்! 




    பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,
    வரலாற்றுத் துறை,
    கா.மு.கல்லூரி.

Just Play With Your Food…

“For heaven’s sake, just play with your food” says Momma sternly to child, and you laugh. Yes, because it’s a classic cartoon of a cat momma talking to a kitten with a mouse. Or maybe it’s just a catnip mouse.

So when is food a toy, and when is a toy food? Toddlers are confused, and so are parents and consumer groups wrestling with the toys given away by Ronald McDonald in his tasty chain of family eating establishments. Harmless you say. Well, maybe, but let’s chew on the issues.

The Center for Science in the Public Interest is a mouthful, but it’s not about finding the final frontiers of cosmetic surgery, it’s about food and it’s suing McDonald’s in California. CSPINET say in their press release, “A mother of two from Sacramento, Calif., says that McDonald’s uses toys as bait to induce her kids to clamor to go to McDonald’s and to develop a preference for nutritionally poor Happy Meals. ”
“According to Parham, the main reason her six-year-old daughter, Maya, asks to go to McDonald’s is to get toys based on Barbie, i-Carly, Shrek, or Strawberry Shortcake.”

So they’re filing a class action suit to stop the toy giveaways entirely. Up till now California law did allow them with “healthy” versions of Happy Meals, meaning ones under 600 calories and no french fries but still including cow’s milk. But why would a parent take a child to a McDonald’s in the first place, let alone eat the alleged food themselves? There are healthier and more responsible alternatives.

Kids love building things, and one asked me the reason they can build a new McDonalds so fast. Her friend said they just bring a cement mixer full of a special source that they pour into concrete forms to make the building, then use the same special liquid to make all the food too. Simple and efficient, but has anyone tried eating a McDonald’s? What do those golden arches taste like? They must have a really low fat content anyway.

Comments are closed.

Search Toy Recalls
Cool Toy Videos

Problem retrieving videos from provider: Forbidden
Making Plush Toys & Stuffed Dolls : Cutting the Pattern for a Stuffed Doll
Runtime
3:39
Views
93,245
Princess cake - How to make a princess doll birthday cake
Runtime
6:37
Views
12,299,104